சிவனடியார்களே!!
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் புரட்டாதிச் சனி விரதம் இவ்வருடம் புரட்டாதித் திங்கள் 4ம்நாள் சனிக்கிழமை 20-09-2025 ஆரம்பமாகி நான்கு சனிக்கிழமைகள் நடைபெற இறையருள் கூடியுள்ளது.
புரட்டாதிச் சனி விரதம் 11-10-2025 சனிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.
பக்தர்களின் வசதிக்காக புரட்டா தி சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி தொடங்கி இரவு 9.00 மணி வரை சிவன் கோயில் திறந்திருக்கும்.
சனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் எமது வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாதி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கறுப்பு எள்ளு கறுப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி நவக் கிரகங்களை வணங்குவது மரபு.
சுட்டி, கறுப்பு எள், நல்லெண்ணைய் ஆகி யன கோயிலில் விற்பனைக்கு உண்டு,.
சனி பகவானுக்கு பக்தர்கள் குருக்கள் மூலம் நீர் ஊற்றி வழிபடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சனிபகவானுக்கு நீர் வார்த்தல்
காலை 9.00 மணிமுதல் மதியம் 11.30 மணிவரை
அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
|