சனிப்பெயர்ச்சி
26 – 12 -2020   சனிக்கிழமை.

ஏழரை ஆண்டுகளின் பின் சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
அதனால் ஏற்படும் தோஷம் நீங்கப் பெறவும் சுப பலன்கள் கிடைக்கவும் சனி பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு.

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை.சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது.
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான நவக்கிரகமாகக் கருதப்படும் சனிபகவான் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்துவிடுவார். அப்படிப்பட்ட சனி அவரவர் ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதை ஜென்ம சனி என்றும், இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் சொல்லப்படுகிறது.
ஏழரை ஆண்டு சனி காலத்தில் இது வரும். அனைத்து பெயர்ச்சிகளை விடவும் அதிகம் பயப்படுகின்றார்கள் என்றால் அது சனிப்பெயர்ச்சிக்கு மட்டும்தான். ஏன்? என்றால் சனி ஒரு ராசியில் 21/2 ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கின்றார்.
இந்த காலகட்டத்தில் வாழ்க்கை என்ற பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் செல்கின்றார்.
அதிலும், ஏழரை சனி என்றால் சொல்லவா வேணும்? ஒருவர் வாழ்வில் அதாவது, தலை முதல் பாதம் வரை பதம் பார்த்துவிட்டுச் செல்வார் என்றே சொல்லலாம்.

    பலன்கள் 2020